Wednesday, January 14, 2009

நேற்றைய கனவு…….

அவசரமாக வெள்ளவத்தைக்கு ஒரு பயணம்
அங்குலான check point
IC பார்த்த police காரன் எதுவுமே கேட்கவில்லை
அதிசயமாகத்தான் இருந்தது......
தெகிவளையில் குங்குமப்பொட்டு வைத்த
ஒரு கர்ப்பிணிப் பெண்ஏறுகிறாள்......
புத்த பிக்கு எழுந்து இடம் கொடுக்கிறார்.....
என்ன ஆச்சரியம்........?
இது இலங்கை தானா..........
கதவு தட்டும் ஓசை,வாசலில் hostel warden்
தமிழ் எல்லாம் IC ஐ கொண்டுபோய் பதியட்டாம்....
ஏதோ புது நடைமுறையாம்..........!
அஃறிணையில் சொன்னான்......
அதுதானே பார்த்தன்.........
நாயைக்கூட 'இருக்கிறார்(இன்னவா)' என்னும்நல்ல தேசமல்லவா இது.............!

No comments:

Post a Comment